30 அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்க அரசு தீர்மானம்

30 அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்க அரசு தீர்மானம்

சுமார் முப்பது அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் முக்கிய அரசு ஊடக நிறுவனம் ஆகிய 30 நிறுவனங்கள் இதில் அடங்குகின்றன.
இதேவேளை மேல் மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி k.m.c. ஜெயந்தி விஜயதுங்க பதவியிலிருந்து நீக்கி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது ஆனால் விஜய் அதிமுகவின் இடமாற்றம் குறித்து பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்ததால் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் தலைவராக தற்போது கடமையாற்றும் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளது. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிஷினி விக்கிரமசிங்க தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் இந்நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றி வரும் சர்மிளா ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு உயர்ஸ்தானிகர் பதவிக்கு கலாநிதி ஜகத் வெள்ளவத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அவுஸ்திரேலியா இடைநிறுத்தி உள்ளதால் இத்தாலி காண இலங்கை தூதுவராக கலாநிதி வெள்ளவத்தை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிருந்து தகவல் கசிந்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *