31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 31ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் குறித்த இரு மாவட்டங்களிலும் உள்ள இறைச்சிக்கடைகளும் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *