360 பேருக்கு மேற்பட்டவர்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது ஸ்ரீலங்கா அரசு!

360 பேருக்கு மேற்பட்டவர்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது ஸ்ரீலங்கா அரசு!

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 360இற்கும் அதிகமானவர்களையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிடப்பட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியிலேயே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *