4½ லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

4½ லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 357 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவுக்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 65 ஆயிரத்து 939 ஆக உயர்ந்தது.இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 321 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 111 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,502 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 14 ஆயிரத்து 326 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *