29 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக்கொலை.

29 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக்கொலை.

புத்தளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாலேயே மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்துள்ளார். அத்துடன் உயிரிழந்த மனைவியின் சடலத்தை சாக்குப் பை ஒன்றில் வைத்து கட்டிலுக்கு கீழ் மறைத்து வைத்துள்ளார்.இன்று அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கட்டிலுக்கு கீழ் இருந்த சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *