இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை .

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை .

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.இந்தநிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா நிருபர்களிடம் கூறியதாவது:-இந்தியாவில் தீவிர கொரோனா பரவல் காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன் வந்துள்ளன.

இதன்படி 550 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 4 ஆயிரம் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் மற்றும் 10 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம்.ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 2 சிறப்பு விமானங்கள் அமெரிக்காவில் இருந்து இன்று வருகிறது. மேலும் எகிப்தில் இருந்து 4 லட்சம் ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதே மருந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் பெற முயற்சி மேற்கொள்ளபடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியபோது கொரோனா சவாலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவோம் என்று அதிபர் புதின் உறுதி அளித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *