இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை  சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் கைது.

இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் கைது.

வவுனியா சிதம்பரம் ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை தொலைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கியதுடன் துன்புறுத்தி அதனை தொலைபேசியில் காணொளியை பதிவுசெய்து மேற்கொண்டு சமூகவலைத்தளத்தில் குறித்த நபர் பதிவேற்றியிருந்தார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதனையடுத்து அவரை அவமானபடுத்தி சித்திரவதைக்குட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்ற அடிப்படையில் குறித்த குற்றச்செயல்களில் ஈடுபட்டமை,காணொளியினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆச்சிபுரம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த காணொளியினை பதிவேற்றிய சமூக வலைத்தளங்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதுடன் குறித்த இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *