பயணஅறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மாலைதீவு !

பயணஅறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மாலைதீவு !

இலங்கைக்கு பயணிக்கும் மாலைத்தீவு மக்களுக்கு பயண அறிவுறுத்தலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கு செல்லும் அனைத்துப் பயணிகளும் இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் இடத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை முடிக்க வேண்டும் என்று இந்த அறிவுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் கொரோனா சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளது.இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலுப்படுத்தும் செயற்பாடு அமைந்துள்ளதாக மாலைதீவு வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *