வாள்வெட்டு குழு அட்டகாசம் !

வாள்வெட்டு குழு அட்டகாசம் !

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வாள்வெட்டு குழு வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *