ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்த பெண்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்த பெண்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.

7-ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இது உலக சாதனையாகக் கருதப்பட்டது.

தற்போது தென்னாபிரிக்கப் பெண் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார். இதுதான் இப்போது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *