21ஆம் திகதி நாட்டைத் திறக்க முன் உண்மை நிலைவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் : அமைச்சர் ரம்புக்வெல

21ஆம் திகதி நாட்டைத் திறக்க முன் உண்மை நிலைவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் : அமைச்சர் ரம்புக்வெல

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டைத் திறப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்த பின் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல கூறினார்.

இன்று(15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதைக் கூறினார்.நாட்டைத் திறப்பதே அரசாங்கத்தின் நம்பிக்கை என்றும், அடுத்த சில நாட்களில் வாய்ப்புகள் சாதகமாக மாறினால், சாதகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *