இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி கைது

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி கைது

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் படுகொலை செய்யப்பட்டதாகதெரிவிக்கப்படும் சந்தேக நபரை கைதுசெய்ய தமிழக பொலிஸார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர்.

49 வயதான லவேந்திரன் என்ற நபர் தனது 32 வயதான மனைவி கவிதாவை திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், காந்திமா நகரில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம்பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கவிதா, தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பின்னர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு லாவேந்திரனை மணந்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) இன் கீழ் பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *