இலங்கையில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதா ?

இலங்கையில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதா ?

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் நான்காக அதிகரிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கவுள்ளது. இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும் புதிதாக பதவியேற்க உள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளதாகவும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை விரைவில் அமைச்சரவை மாற்றம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *