சிவில் அமைப்புகள்,வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை -கஜேந்திரகுமார்

சிவில் அமைப்புகள்,வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை -கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

73 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அடக்குமுறைகளும், அநீதிகளும் தற்போது கட்சி பேதமின்றி அனைவர் மீதும் பிரயோகிக்கப்படுவதாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தற்போது செயல்படும் தென்னிலங்கை சிவில் அமைப்புகள், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அரசாங்கம் கொவிட் சூழலை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதியான இன்பம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *