கண்டியில் இரு மொடர்னா தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் பெற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்

கண்டியில் இரு மொடர்னா தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் பெற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு தாதி ஒருவரால் ஒரே நேரத்தில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் செனக தலகல தெரிவித்தார்.

கண்டியில் கொவிட் தடுப்பூசியைப் பெறுவதற்காக ஒகஸ்டாவத்த மையத்துக்கு நேற்று சென்றிருந்த ஒரு பெண்ணுக்கு இரு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அப்பெண்ணின் கணவர் பேராதெனிய பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இரு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட அப்பெண் சம்பவ இடத்தில் மயக்கமுற்று அங்கிருந்த சுகாதார பணியாளர்களால் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீட்டில் மீண்டும் மயக்கமுற்றதையடுத்து பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை ஒகஸ்டாவத்த தடுப்பூசி மையத்தில் ஒரு பெண்ணுக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக தனக்கு முறைப்பாடு வந்ததாகவும், மையத்தை பொறுப்பேற்றுள்ள மருத்துவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *