‘செல்பி’ எடுக்க பாலத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு யாழ். பண்ணைக் கடலில் நேற்று சம்பவம்

‘செல்பி’ எடுக்க பாலத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு யாழ். பண்ணைக் கடலில் நேற்று சம்பவம்

செல்பி’ எடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் தூணில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கடலில் வீழ்ந்து இறந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த கௌதமன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடலில் விழுந்த இளைஞரை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் தேடியபோதும் நேற்றுமீட்க முடியவில்லை. நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் காணாமல் போனவரை தேடும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *