மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

கொரோனா தொற்றுப் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலையைப் புறக்கணிக்கும் நாட்டின் தலைவர்களின் செயலால் தான் மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சுகாதாரப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை புறக்கணித்து, சொந்த அரசியல் நலனுக்காக அரசாங்கம் செயற்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளை குறைப்பதற்கு நாடளாவிய பொது முடக்கம் அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியை முடக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *