ஆப்கானில் வீடுகளில் தலிபான்கள் சல்லடை…

ஆப்கானில் வீடுகளில் தலிபான்கள் சல்லடை…

அமெரிக்கா மற்றும் நேடோ படையினருக்கு உதவியவர்களை தேடி, தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதாக ஐ.நா.,வின் ரகசிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆப்கனில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்தாலும், ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலிபான்களின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தயாரித்த ரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதை தயாரித்தவர்கள், தங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேடோ படைகளுக்கு உதவி செய்தவர்களை வீடு வீடாக சென்று தலிபான்கள் தேடி வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்களையும் மிரட்டி வருகின்றனர். தங்களின் பேச்சை கேட்காதவர்களை ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்குகின்றனர். நேடோ மற்றும் அமெரிக்க படைகளுக்கு உதவியர்கள், இணைந்து செயல்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, தலிபான்கள் கொடுமைப்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *