பாலியல் குற்றத்தில் சிக்கிய விகாராதிபதி

பாலியல் குற்றத்தில் சிக்கிய விகாராதிபதி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு – புன்னைக்குடா விகாரையின் விகாரதிபதியை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைப் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கியிருந்த 11 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில், ஏறாவூர் காவல்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்ட விகாரையின் விகாராதிபதி, இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேகநபரான விகாராதிபதியை 14 நாட்கள் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *