தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்…

தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்…

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே மூதாட்டி மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கொவிட் பரிசோதனைகள் குறைவடைந்துள்ளமையினாலேயே கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

வீடுகளில் கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் 52,361 பேர் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 37,448 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் 14,233 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வந்த 607 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *