தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த மனோ கணேசன்…

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த மனோ கணேசன்…

லொஹான் ரத்வத்தையினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் கைதிகள் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைக்குச் சென்று இடையூறுகளுக்கு மத்தியில் தமிழ் அரசியல் கைதிகளை மனோ கணேசன் சந்தித்ததுடன் கைதிகள் தன்னிடம் கூறிய விடயங்களை அவர் வௌியிட்ட நிலையிலேயே மேற்படி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,

உள்ளே சென்றபோது ஊடகங்களில் வந்த அனைத்து செய்திகளும் உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லொகான் ரத்வத்தை என்ற அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்தார் என அங்கே இருக்கக்கூடிய சிறைக்கைதிகள் எங்களுக்கு நேரடியாக தெரிவித்தனர். அவர் மது போதையிலிருந்ததால் துப்பாக்கியை எடுத்து லோட் செய்து தன் முன்னால் நீட்டியதாக ஒரு சிறைக் கைதி தெரிவித்தார். சற்று பிசகியிருந்தால் அது வெடித்திருக்கும் அது வெடித்திருந்தால் தாங்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றதாகவும் பதிலுக்கு அவர் சுட்டதாகவும் கலவரம் நிகழ்ந்ததாகவும் கதை கட்டியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்தனர்.

எவ்வளவு பரிதாபமான கதை இது என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *