ஒரு மில்லியன் போலி யூரோ கரன்சியுடன் இருவர் கைது

ஒரு மில்லியன் போலி யூரோ கரன்சியுடன் இருவர் கைது

தெமட்டகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் STF அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினரின் எச்சரிக்கையின் அடிப்படையில் STF புலனாய்வு அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக STF தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், 45 வயதுடைய ஆணும் இவ்வாறு போலி நாணயங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போலியான உண்டியல்களை இலங்கை நாணயத்தில் வேறொரு தரப்பினருக்கு மோசடியான முறையில் பரிவர்த்தனை செய்ய முயற்சித்துள்ளனர்.சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் பணமோசடி செய்பவர்கள் மூலம் இந்த போலி நாணயம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளது.
editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *