முல்லேரியாவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபா 2.5 மில்லியன் சன்மானம்

முல்லேரியாவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபா 2.5 மில்லியன் சன்மானம்

திங்கட்கிழமை முல்லேரியா, கொட்டிகாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 42 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 2.5 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்கள் முழு முக தலைக்கவசம் அணிந்து உயிரிழந்தவரின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.பிரதான சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரி சந்தேகநபரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை, அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் வெளி தரப்பினருக்கு தெரிவிக்கப்படாது என்றும் உறுதியளித்திருந்தனர்.சந்தேகநபர் 30 வயதுடையவர்,911854481V என்ற அடையாள இலக்கத்தை கொண்டவர்,இல. 42/02,பரோன் திலகானந்தா மாவத்தை இல் வசிக்கும் பொன்னம்பெரும ஆராச்சிகே டொன் தனுஷ் புத்திக என்று அழைக்கப்படுபவரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேக நபரின் மனைவியின் இலக்கம் 333 சி, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, மாலபே என்ற முகவரியில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரின் தோள்பட்டை முதல் முழங்கை வரை இரண்டு கைகளிலும் பச்சை குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அங்கொட, ஹிம்புட்டானை, முல்லேரியாவ புதிய நகரம், வெலிகம, மிதிகம, ஹிக்கடுவ மற்றும் காலி ஆகிய பகுதிகளே சந்தேகநபர் அதிகமாகச் சென்ற பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.மேலும், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் WP XV 5432 ஆகும்.071-8591727 அல்லது 077-7370360 என்ற இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.











editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *