யாழ் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

யாழ் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

யாழ் மாவட்டத்தின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தற்போது நிலவும் தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது இதனால் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் இதேவேளை தொழிலுக்கு செல்வோரும் மறு அறிவித்தல் வரை அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *