நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை – ஐவர் பலி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை – ஐவர் பலி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஐவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அருகிலான பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மலையுடனான காலநிலை நிலவுகிறது.

இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1136 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 364 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து ஒருவர் காணாமல் போயுமுள்ளார். மேலும் 12 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *