மாலை வெளியான சிவப்பு எச்சரிக்கை!

மாலை வெளியான சிவப்பு எச்சரிக்கை!

மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக் கடலிலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக கரைக்கு வருமாறு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டி தமிழக கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *