கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது!

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது!

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை பிரதேசத்தில் அமைந்திருந்த இரண்டு மாடி கட்டடமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், நிலம் தாழிறங்கியதன் காரணமாக, வர்த்தக நிலையமாக இயங்கிவந்த குறித்த கட்டடம் நேற்று (10.11.2021) இரவு முற்றாக சரிந்து விழுந்துள்ளது.இதனால் அதிலிருந்த அனைத்து பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் வர்த்தக நிலையத்தை பூட்டிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மூவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *