டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளான சிறுவனின் !

டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளான சிறுவனின் !

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமை ஏ9 வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்னர்.பளைநோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன்  துவிச்சக்கர வண்டியில் குடை பிடித்துக் கொண்டு பளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை காற்றுக்கு குடை மடிந்தவுடன் வீதி மறைத்துள்ளது. இதன் காரணமாகவே முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் மூக்குப் பகுதியில் காயமடைந்த சிறுவன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *