கிளிநொச்சியில்  ஆடையகத்திற்குள் புகுந்த டிப்பர் வாகனம்!

கிளிநொச்சியில் ஆடையகத்திற்குள் புகுந்த டிப்பர் வாகனம்!

கிளிநொச்சியில் உள்ள ஆடையகம் ஒன்றுக்குள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆடையாகத்தில் பணியாளர்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற மக்கள் என பலர் இருந்த போதும் எவருக்கும் எந்த விதமான காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *