எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்…

எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்…

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மசகு எண்ணெய் தீர்ந்து வருவதால் நாளை முதல் எரிபொருள் உற்பத்தியை நிறுத்த தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாட்டிற்கு மசகு எண்ணெயை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோலிய தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித குற்றம் சுமத்தியுள்ளார்.சர்வதேச ரீதியில் லூப்ரிகண்டுகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் விநியோகஸ்தர்கள் பிரச்சினை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என பெற்றோலிய தொழிற்சங்க இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த எரிபொருள் இன்னும் 15 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கும் என இலங்கை பெற்றோலிய மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *