புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

நாளை செவ்வாய்கிழமை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் (Asela Gunawardana) வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்;டுள்ளது.

அத்தோடு சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பரீட்சைகளை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களை வலியுறுத்தியுள்ளார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *