யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர்,சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்பதன் அடிப்படையில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவையை மட்டுமே நிறைவு செய்கிறது.

அதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ். மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது.காங்கேசன்துறை தொட்டியில் பெற்றோல் 92 ஒக்ரைன் – 155,000 லீற்றரும் டீசல்- 2,600,000 லீற்றரும் மண்ணெண்ணெய்- 165,000 லீற்றரும் காணப்படுகிறது. இவை பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *