பூங்கா ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதல்: 6 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

பூங்கா ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதல்: 6 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் பாடசாலைக்கு அருகே உள்ள பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அரோரா நகரில் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாடசாலையில் சிறுவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பாடசாலைக்கு அருகே ஒரு விளையாட்டு பூங்கா உள்ளது.குறித்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனையடுத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? என்கிற தகவல்கள் தெரியவரவில்லை. மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *