அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏ.பி.டி.வில்லியர்ஸ்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏ.பி.டி.வில்லியர்ஸ்!

முன்னாள் தென்னாபிரிக்க நட்சத்திர வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் ( AB de Villiers) அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ஏ.பி.டி.வில்லியர்ஸின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இதேவேளை, அவருடனான உரிமை தொடர்பை திறம்பட முடித்துக் கொண்டதாகவும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அறிவித்துள்ளது.

மேலும், 37 வயதான ஏ.பி.டி.வில்லியர்ஸ் ( AB de Villiers) 2011 இல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான தனது பயணத்தை தொடங்கினர். மொத்தமாக அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் 10 சீசன்களில் விளையாடியுள்ளார்.

ஏ.பி.டி.வில்லியர்ஸின் இந்த அறிவிப்பு மூலம் அவரது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது.

மேலும், அவர் தென்னாபிரிக்க அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *