இலங்கையில் அரிதாக கிடைக்கும் மிகப்பெரிய இரத்தினகல் கண்டுபிடிப்பு

இலங்கையில் அரிதாக கிடைக்கும் மிகப்பெரிய இரத்தினகல் கண்டுபிடிப்பு

இலங்கையில் கிடைக்கும் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் இரத்தின கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருவளை மாணிக்கக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த மாணிக்கக்கல் இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதன் எடை 616.90 காரட் எனவும் இதன் பெறுமதி சுமார் 1 பில்லியன் ரூபா எனவும் வர்த்தகர் கூறுகிறார்.

இந்த மாணிக்கம் மிகவும் அரிதானது எனவே விலை உயர்ந்தது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe)தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *