சிலிண்டர் வெடித்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பாரிய சர்ச்சை!

சிலிண்டர் வெடித்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பாரிய சர்ச்சை!

பொலநறுவையில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடித்தத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் எரிந்து 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்தார்.

 இதேவேளை குறித்த இளம் பெண் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தே இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருமணமான பெண் இறப்பதற்கு முன்னர் மருதானை பொலிஸாருக்கு மரண வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கும், அங்கிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (24) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *