திருகோணமலையில் நபரொருவரின் உயிரை பறித்த குளவி! பெரும் சோக சம்பவம்

திருகோணமலையில் நபரொருவரின் உயிரை பறித்த குளவி! பெரும் சோக சம்பவம்

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (02) காலை திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் தென்னமரவாடி பகுதியை சேர்ந்த 69 வயதுடைய கனகசபை குகநாதன்  எனவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீட்டிலிருந்து மாடு பார்ப்பதற்காக சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும் இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *