காரில் வந்த மர்ம கும்பல்: கொழும்பில் இரவு அரங்கேறிய கொடூர சம்பவம்

காரில் வந்த மர்ம கும்பல்: கொழும்பில் இரவு அரங்கேறிய கொடூர சம்பவம்

ஓல்ட் யோர்க் வீதியில் நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கொழும்பு வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 32 வயதுடைய கெசல்வத்தை ஃபவாஸ் என்வரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஓல்ட் யோர்க் வீதியில் காரில் வந்த குழு ஒன்று குறித்த நபரை வெட்டிக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்பட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *