பிரான்சில் சார்ஜர் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாப மரணம்! நடந்தது என்ன?

பிரான்சில் சார்ஜர் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாப மரணம்! நடந்தது என்ன?

பிரான்சில் குளித்துக் கொண்டிருந்த போது, தொலைபேசிக்கு சார்ஜ் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரான்சின், Saône-et-Loire மாவட்டத்தில் வசித்து வரும் 10 முதல் 13 வயது மதிக்கத்தக்க சிறுமிகள், கடந்த மாதம் 29-ஆம் திகதி குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது, தொலைப் பேசியை எடுத்து சார்ஜ் போட முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் அவர்களை தாக்கியதால், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதன் பின் உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதில் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த போது, 13 வயது சிறுமி மற்றும் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், உயிரிழந்த சிறுமி, பயங்கரமான மின் தாக்குதலுக்கு உள்ளதான், அவர் மூளை சாவு அடைந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணையை துவங்கியுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *