நடுக்கடலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பாரிய சரக்குக் கப்பல்கள்!.. தீவிரப்படுத்தப்பட்டுள்ள மீட்புப் பணிகள்

நடுக்கடலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பாரிய சரக்குக் கப்பல்கள்!.. தீவிரப்படுத்தப்பட்டுள்ள மீட்புப் பணிகள்

சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் குறித்த விபத்தில் சிக்கியவர்களை  மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலையில் டென்மார்க்கின் கரின் ஹோஜ் (Karin Hoej) மற்றும் பிரித்தானியாவின் ஸ்காட் கேரியர் (Scot Carrier) கப்பல்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு பேர் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று சுவீடிஷ் கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தெற்கு சுவீடிஷ் கடற்கரை நகரமான யஸ்டாட் மற்றும் டேனிஷ் தீவான போர்ன்ஹோல்ம் இடையே பால்டிக் கடலின் ஒரு பகுதியில் இந்த சம்பவம் நடந்தபோது கரின் ஹோஜ் கப்பலில் இரண்டு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

சுவீடன் மற்றும் டென்மார்க்கில் இருந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் சுமார் 10 படகுகள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு கப்பல் 90மீட்டர் (295அடி) நீளமும் மற்றொன்று 55மீட்டர் நீளமும் கொண்டது என சுவீடிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *