யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதல் பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *