சர்வதேசத்தில் முறையிடுவோம்; இலங்கையை எச்சரிக்கும் சீன நிறுவனம் !

சர்வதேசத்தில் முறையிடுவோம்; இலங்கையை எச்சரிக்கும் சீன நிறுவனம் !

இலங்கை வங்கிகளிற்கு எதிராக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளிடம் முறையிடப்போவதாக உரவிவகாரத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணம் செலுத்த தவறியமை தொடர்பிலேயே இலங்கை வங்கிகளிற்கு எதிராக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களிடம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீவின் பயோடெக் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட உரத்துடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் ஆபத்தான பக்ரீயாக்கள் காணப்படவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனைகளில் இது உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசவங்கிகள் குறித்து மூன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *