யாழில் இருந்து சென்ற புகையிரதம்; நண்கபல் இடம்பெற்ற கோர விபத்து

யாழில் இருந்து சென்ற புகையிரதம்; நண்கபல் இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று நண்பகல் வனவாசலைப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சில மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

அதேவேளை அப்பகுதி மக்கள் இணைந்து தீயினை அணைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *