இந்திய பகுதிக்குள் நுழைந்து சிறுவனை கடத்திய சீன வீரர்கள்!

இந்திய பகுதிக்குள் நுழைந்து சிறுவனை கடத்திய சீன வீரர்கள்!

சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து சிறுவன் ஒருவனை கடத்தி சென்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த குறித்த சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன இராணுவம் அவனை கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17) என்ற சிறுவனை சீன இராணுவம் கடத்தி சென்றுள்ளது. ஆனால் இந்திய சிறுவன் மாயமானது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு செய்தி தெடர்பாளர் தெரிவிக்கையில், ‘சீன இராணுவம் சட்டத்துக்கு உட்பட்டு எல்லைகளை கண்காணிக்கிறது. அத்துடன் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. ஆனால் சிறுவன் மாயமான இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *