நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் IOC நிறுவனம் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க திர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.இதேவேளை தற்போது 177 ரூபாவாக காணப்பட்ட வரும் ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட வரும் ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *