இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் பல்வேறு பொருட்கள், சேவைகளின் கட்டண அதிகரிப்பு போலவே ஆடைகளின் விலைகளிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30 – 31 வீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய நாட்டு சூழ்நிலையின் காரணமாக உள்ளூர் ஆடைத் தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைகளை இழப்பதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 200,000 ரூபாவை அறவிட்டன. ஆனால் தற்போது அது ஒரு மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு பொருளாக இறக்குமதி செய்யும் போது சதுர அடிக்கு அறவிடப்படும் தொகை 6,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *