உப்புவெளியில் ஒருவர் கடத்தி கொலை : சந்தேகநபருக்கு விளக்கமறியல்

உப்புவெளியில் ஒருவர் கடத்தி கொலை : சந்தேகநபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை – உப்புவெளியில் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(16) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வருகைதந்த சந்தேகநபர்கள், 41 வயதான வர்த்தகரை அவரது வர்த்தக நிலையத்திற்குள் சென்று தாக்கியுள்ளதுடன் அவருடைய கெப் வாகனத்தில் கடத்திச்சென்று மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்மட்டவச்சி காட்டுப்பகுதியில் எரித்துள்ளனர். செல்லையா ஜெயரூபன் என்பவரே இவ்வாறு எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றைய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உப்புவௌி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.தனிப்பட்ட தகராறினால் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *