தந்தையின் மரணத்திற்காக இலண்டனில் இருந்து யாழ். வந்த மகன் மாரடைப்பால் மரணம்

தந்தையின் மரணத்திற்காக இலண்டனில் இருந்து யாழ். வந்த மகன் மாரடைப்பால் மரணம்

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் கடும் சோகத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய சச்சிதானந்தம் சிவசிதம்பரநாதன் எனும் அவரது தந்தை சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது 31 வயதான மகன் நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில் தந்தையின் மரணம் காரணமாக தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த 30ஆம் திகதி குடும்பத்துடன் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்துள்ளார்.

வீடு திரும்பிய அவர் திடீரென மயங்கி கீழே வீழ்ந்த நிலையில், உடனடியாக காரைநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றையதினம் (18) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், மாரடைப்பு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மரணமடைந்தவர் எஸ். பிரகாஸ் எனும் இளைஞனாவார்.

உயிரிழந்தவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *