இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்…

இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்…

இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு தங்கம், போதைப் பொருட்கள் போன்றவை கடத்திச் செல்லப்படுகின்றன.

இவ்வாறே ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மருந்து போன்றவையும் கடத்துவது அதிகரித்துள்ளன.

இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் மண்டபம், தனுஷ்கோடி, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து படகு மூலம் மண்டபத்திற்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடலோர காவல் படை யினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மண்டபம் கடலோர பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் மண்டபம் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக ஒரு விசைப்படகு சென்றுள்ளது. அந்த படகை அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் சோதனையிட்டனர். அதன்போது அதில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 9 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்த மண்டபத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். முகாம் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *