பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல்

பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.

பேர்ண்லிக்கு கிடைக்கப்பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது.

இதேவேளை, புல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பொபி றெய்ட் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கிறிஸ்டல் பலஸ்னின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ்க்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றதோடு, பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெஃப்ரி ஸ்கல்ப்பும் பெற்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *